Monday 18 June 2012

என் மலரும் நினைவுகள்.......



என் கல்யாணத்தின்போது அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .என் அண்ணனுக்கும் எனக்கும் மூன்று நாள் இடைவெளியில் கல்யாணம் நடந்தது .என் அண்ணன் கல்யாணத்திற்கு பத்து நாளைக்கு முன்புதான் ஊருக்கு வந்தார் .அதனால் ஏறக்குறைய அனைத்து வேலைகளையும் நானே செய்தேன் .

அப்படி இருக்கும்போது எனது தந்தை என்னை கூப்பிட்டு உன் கல்யாணத்தன்று பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய் என சொல்லிவிட்டார் .அண்ணனுக்கு வெளியூர் பொண்ணு ,எனக்கு உள்ளூர் பொண்ணு .அண்ணன் வரவேற்பும் ,அன்றே எனக்கு திருமணமும் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

கல்யாண வீடுகளில் டெக்கரேஷன் செய்வது அப்பொழுதுதான் ஆரம்பம் ஆகி இருந்த நேரம் .அப்ப அறந்தாங்கியில் சுபால் டெக்கரேஷன் என ஒருவர் நடத்திக்கொண்டு இருந்தார் .அவர் மதுரையை சேர்ந்தவர் .அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பாட்டுக்கச்சேரி வைக்கணும் என .அவர் மதுரையில் எனக்கு தெரிந்த நிறைய குருப் இருக்கு வாங்க போய் பேசிவிட்டு வருவோம் என சொன்னார் .நானும் அவருடன் மதுரைக்கு கச்சேரி புக் செய்ய சென்றேன் .

நாங்க மதுரையில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒயிட் ரோஸ் என்ற குருப்பை போய் பார்த்தோம் .அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எங்கள் குருப் மட்டும் வந்தால் ஒரு ரேட்.இங்கே நெல்லை பிரபாகர் என்பவர் மிக பிரபலம் அவரை அழைத்து வந்தால் கூடுதல் தொகை என சொன்னார்கள் .அவர் பாடிய விடியோவையும் போட்டு காட்டினார்கள் .எஸ் பி பாலசுப்ரமணியம் குரலை நகல் எடுத்து இருந்தது அவர் குரல் .எனக்கும் மிக பிடித்து விட்டது .அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் .

ஊருக்கு வந்து நெல்லை பிரபாகர் கலக்கும் மதுரை ஒயிட் ரோஸ் இன்னிசை குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெறும் என நோட்டிஸ் அடித்து எங்கும் ஒட்ட சொல்லிவிட்டேன் .

கல்யாணத்தன்று இரவு இசைக்குழுவும் வந்து மேடையில் ஆர்கெஸ்ட்ரா பொருட்களை சரி செய்துகொண்டு இருந்தார்கள் .நல்லகூட்டம் கூடி விட்டது .எனக்கு ஊரில் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் பெரியது .எல்லோரும் வந்துவிட்டார்கள் .சரியாக ஒன்பது மணிக்கு கச்சேரி ஆரம்பம் ஆனது .முதலில் இஸ்லாமிய பாடல்கள் பாடினார்கள்

.அனால் மேடையில் நெல்லை பிரபாகரோ,பெண் பாடகியோ யாரும் இல்லை .இரண்டு மூன்று பாடல்கள் முடிந்தபின்பு வருவார்கள் என பார்த்தோம் .மூன்று பாடல் முடிந்த பின்பும் நெல்லை பிரபாகர் வரவில்லை .நான்காவது பாடலுக்கு இரண்டு நபர்கள் மைக்கை பிடித்து தயாராக இருந்தார்கள் .இசை ஆரம்பம் ஆகி பாட ஆரம்பித்தார்கள் .என் முகம் போனபோக்கை இன்று பார்த்தாலும் சொல்ல வார்த்தை இருக்காது .அந்த இருவரில் ஒரு ஆண் பெண் குரலில் பாடினார் .என் நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்தே நோகடித்து விட்டனர் .நெல்லை பிரபாகரும் வரவில்லை .பெண் பாடகியும் வரவில்லை .இன்று வரைக்கும் என் நண்பர்கள் அந்த கச்சேரியை சொல்லி சிரிப்பார்கள் .

நெல்லை நண்பர்களே இன்னும் அந்த நெல்லை பிரபாகர் பாடிக்கொண்டு இருக்கின்றாரா .

மதுரை நண்பர்களே இன்னும் அந்த ஒயிட் ரோஸ் இசைக்குழு இயங்கிக்கொண்டு இருக்கிறதா

No comments:

Post a Comment