Sunday 10 June 2012

அவளிடம் நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்


எழுதாத கவிதை ஒன்றை
எழுதுவேன் என்றேன்
என்னவென நீ கேட்டாய்
உன் பெயர்தான் என
உன்னிடம் சொன்னேன்

சிரிக்காதே என்றபோதெல்லாம்
சிரித்துக்கொண்டே இருக்கிறாய்
சிதறுகிறது என் நெஞ்சம்
என்பதை அறியாமலே

என் புன்னகை தொலைத்தேன்
என்றேன்
எங்கே என்றாய்
உன் புன்னகையிடம் என்றேன்.


நிலவு அழகு என்றாய்
இல்லை என்றேன்
அப்புறம் எது என்றாய்
அது நீதான்
என்றேன்

என் பேனா
உன்னை கவிதை எழுத
மறுக்கிறது
காரணம் கேட்டேன்
உன் அழகுக்கான வார்த்தைகள்
என்னிடம் இல்லையேன
சொல்கிறது


12 comments:

  1. கவிதைகள்...அதிலும் காதல் கவிதைகள்
    ஏன்...(பெரும்பாலும்) வாசிக்கும் போது சந்தோசத்தை மட்டுமே தருகிறது??

    ReplyDelete
  2. //என் பேனா
    உன்னை கவிதை எழுத
    மறுக்கிறது
    காரணம் கேட்டேன்
    உன் அழகுக்கான வார்த்தைகள்
    என்னிடம் இல்லையேன
    சொல்கிறது//

    அழகா இருக்கு நண்பரே...........

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜ உங்கள் வருகைக்கு

      Delete
  3. கவிதை!

    உணர்வு பூர்வமாக!
    உணர்ச்சி பூர்வமாக!

    ReplyDelete
    Replies
    1. seeni என் ஆரம்ப பதிவில் இருந்து இப்பொழுது வரை என் தளத்திற்கு வந்து படித்து என்னை ஊக்கபடுத்தி வருகின்றீர்கள் .மிக்க நன்றி

      Delete
  4. உங்கள் புன்னகையை மட்டுமல்ல வார்த்தைகளையும் களவாடி விட்டாலோ ரசிக்கும் படியாக இருந்தது .

    ReplyDelete
    Replies
    1. சசிகலா உங்கள் வருகையும் கருத்தும் இன்னும் என்னை மென்மேலும் எழுததூண்டும் .மிக்க நன்றி

      Delete
  5. கவிதை கவிதை பாய் ...
    நிலவு அழகு என்றாய் இல்லை என்றேன் அப்புறம் எது என்றாய் அது நீதான் என்றேன்
    அருமை பாய்

    ReplyDelete
    Replies
    1. மாஹின் மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  6. Replies
    1. திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்

      Delete