கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.
மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.
அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.
சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.
கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.
இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.
அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.
மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.
இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.
Tweet |