Monday 30 September 2013

ராஜா ராணி


ஒரு கல்யாணம்.ரென்டு காதல்.ஒரு முடிவு.
படம் தொடக்கமே எங்கோ வெறித்து பார்த்தபடி ஆர்யா நயன்தாரா இருக்க அவர்கள் இருவருமே மனதளவில் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது அவர்கள் இருவருக்கும்.
முதலிரவு தொடங்கி ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்குவதுமாக இருக்கின்றார்கள்.ஆர்யாவின் செயல்களால் மனம் உடைந்து அழும்போது நயன்தாராவுக்கு முடியாமல் வந்துவிடுகிறது.ஆர்யா நயன்தாராவை மருத்துவமனையில் சேர்க்கிறார்.பின்பு இதற்க்கு முன்பு உங்களுக்கு இது போல நடந்து இருக்கா என கேக்கும்போது அங்கே தொடங்குகிறது ஜெய்க்கும் நயந்தாராவுக்குமான கதை.மிக அழகியழோடு படமாக்கப்பட்ட காதல் கதை.அதை நான் இங்கே சொல்ல போவது இல்லை.திரையில் பாருங்கள்.நயந்தாரா அழகாகவும் அதே அளவு நடிப்புமாக கலக்கி இருக்கின்றார்.ஜெய்யும் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.இவர்கள் இருவருக்குமான கதையில் மிக அழகாக பொருந்தகூடிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நயன்ந்தாரா அப்பாவாக.மொத்தத்தில் ஒரு சிறந்த சிறுகதை படத்தின் முதல் பகுதி.


படத்தின் இரன்டாம் பகுதியும் காதல் கதைதான்.நஸ்ரியாவின் துள்ளல் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் நன்றாக இருக்கு .முதல் பகுதி போல இரண்டாம் பகுதி வேகம் இல்லையெனினும் நஸ்ரியாவின் சிரிப்பும் ,இடை இடையே சந்தானம் கோஸ்ட்டி அடிக்கும் கூத்துமாக நகர்கிறது.
இந்த இரண்டு காதலின் முடிவும் ஒரு தோல்வியில் முடிந்து ஒரு கல்யாணத்தல் இனைந்து இருவரும் ஒன்றமுடியாமல் இருப்பதும் பின்னர் இனைவதும் கதை.

க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.
நயன்ந்தாரா,நஸ்ரியா இருவரும் முழுப்படத்தையும் தாங்குகிறார்கள்.மற்றபடி படம் நிச்சயம் திரை அரங்கில் பார்க்கலாம்.


அட்லீக்கு முதல்படம் இது.நல்ல இயக்கம்.அடுத்த படம் நிச்சயம் இதைவிட நன்றாக தருவார் எனம் நம்பிக்கை தருகிறது இந்த படம்.இசை வழக்கம் போல. ஒளிப்பதிவு அருமையா இருக்கு.
படத்தின் சின்ன சின்ன காட்சிகலாக செதுக்கி நன்றாக இருக்கு.சில காட்சிகள் மனதில் நிற்க்கும்.
திரை அரங்கம் சென்று பாருங்கள்.
ராஜா ராணிக்கு ராணி ராஜாவுக்கு

Saturday 7 September 2013

வருத்தம் மறந்து சிரிக்க வைக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்



ஒரு படம் உங்களை என்ன செய்யனம்.கவலைகள் மறக்கடிக்க செய்யனும்.அதை நன்றாகவே இந்த படம் செய்கிறது.

கதையெல்லாம் நான் சொல்ல தேவையும் இல்லை ,அப்படி ஒன்றும் புதுமையான கதையும் இல்லை.லாஜிக் ,மேஜிக்,திடிர் திருப்பம் என எதுவுமே இல்லை.ஆனாலும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

சிவகார்த்திகேயன்,பரோட்டா சூரி இருவரும் செய்யும் அதகளமே தியேட்டரை அதிர செய்கிறது.படம் பார்த்துக்கொண்டு இருந்த அனைவருமே சிரித்ததை பார்த்தேன்.

சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மனநிலை நன்றாக தெரிந்து இருக்கிறது.தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.அவர் பேச ஆரம்பித்தாலே நாம் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.பக்கபலமாக சூரி வேறு இருக்கிறார்.வானவேடிக்கை நடத்தி இருக்கின்றனர்.வடிவேலு பார்த்திபன் போல சிவகார்த்திகேயன் சூரி இருவரையும் சொல்லலாம்.




கதாநாயகி புதுமுகம் போலருக்கு.பக்கத்து வீட்டு பெண்ணைப்போல இருக்கிறார்,நன்றாக நடித்தும் இருக்கிறார்.






சத்தியராஜ் அறிமுக காட்சியில் கைது செய்யப்படும்போது சீரியசாக நினைத்து பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் அதுவும் காமடியிலேயெ முடிகிறது.அவரின் அல்லக்கைகள் நாளு பேரின் பாராட்டிலேயே இவரும் லொல்லடிக்கிறார்.




ஆரம்பத்தில் இரன்டொரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இளசுகளின் கைதட்டலை பிந்து மாதவி அள்ளி செல்கிறார்.மறைந்த சில்க் ஸ்மிதாவின் பார்வையை அப்படியே பிரதிபலிக்கிறா

பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் ஆனதுதான்.நன்றாகவே இருக்கு.ஒளிப்பதிவு பாலசுப்ரமனியெம் அதிகமாக மெனக்கெடவில்லை.இந்த படத்திற்க்கு மெனக்கெடவேன்டியதில்லை என அளவாக முடித்துக்கொண்டார்.
வசனம் ஓகே ஓகே இயக்குனர் .ஸ்டேன்டப் காமடி மாதிரி போகிற போக்கில் சிரிக்கவைக்கவேண்டும் என எழுதி இருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் கருத்து குத்து எதுவும் இல்லாமல் அட்வைஸ் செய்யாமல்.நிச்சயம் திரை அரங்கில் போய் படம் பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.

வருத்தபடாமல் ,மனம் நொந்து போகமல் விழுந்து சிரிக்க ஒரு படம்