Sunday 13 May 2012

அம்மா

அம்மா என எழுதும்போதே மெல்லியதாய் மனம் பரவசம் அடைகின்றது .அம்மாவிற்கு அன்னையர் தினம் என ஒரு நாளை ஒதுக்கி வாழ்த்து சொல்வதை விட வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லலாம் அன்பே உருவான அம்மாவிற்கு .

அம்மா என எப்பொழுது அழைக்க தொடங்கினேன் என்பது தெரியாதபோதும் நான் அம்மா என முதன்முதலில் அழைத்தபொழுது என் அம்மாவின் முகத்தில் எவ்வளவு ஆனந்தம் இருந்து இருக்கும் .

சின்ன வயது அம்மா கோட்டோவியாமாய் மனதுக்குள் .கை புடித்து நடக்கையில் என் அம்மா என கம்பீரமாய் நடப்பதாய் தோணும் எனக்கு எல்லோருக்கும் அம்மா இருக்கின்றார்கள் என்பதை மறந்து .

என் அம்மா அழுகை ஒன்றையே வாழ்க்கையாக கொண்டிருந்தபோதும் பிள்ளைகளுக்காக வாழ்வை தொலைத்தவர்கள் என்பது பின்னாளில்தான் உணர ஆரம்பித்தேன் .

தொலைவில் இருந்து தொலைபேசியில் அம்மா என அழைக்கும்போது நல்லா இருக்கியா என அம்மா  கேட்க்கும்போது அந்த ஒற்றைவார்த்தை தரும் ஆறுதல் இந்த உலகம் எனக்கு தந்துவிடாது .

சின்ன வயதில் அம்மாவிடம் கோபித்துகொண்டு இரவில் எங்காவது படுத்து அழுதுகொண்டு இருப்பேன் .கோபம் எனக்குள் இருந்தாலும் பசியெடுக்க மறப்பதில்லை என் வயிற்றுக்கு .வீட்டிற்கு போகவும் மனம் இல்லாமல் பசியும் தாங்காமல் அவஸ்தையோடு அம்மா வரவுக்காக காத்திருப்பேன் .அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு தேடிவரும் அம்மாவிடம் அதற்குமேல் வீம்பு வருமா எனக்கு .

பிள்ளையின் வாழ்வுக்காக பிள்ளையின் காலில் விழுந்து கேட்கும் அம்மாக்களில் என் அம்மாவும் ஒருவர் .வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகவும் நான் வெட்கப்படும் நாளாகவும் அமைந்த நாளாகிவிட்டது என் அம்மா என் காலில் விழுந்து என் வாழ்க்கை தொலைந்து போககூடாது என்பதற்காக மன்றாடியது .

என் வீட்டில் எல்லோருக்காகவும் விட எனக்காக என் அம்மா அழுதது அதிகம் .அழுத அம்மாவுக்கு அன்பை காமிக்க தெரியாதவனாக இருக்கிறேன் நான் .

உலகெங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அம்மாக்கள் இருக்கிறார்கள் .உறவுகளில் மாமியார்களும் ,மருமகளும் ,அக்காக்களும் ,தங்கைகளும் இருந்தாலும் இவர்களுக்குள் முரண்பட்ட வாழ்வுகள் இருக்கின்றன .ஆனால் முரண் இல்லா வாழ்வு ஒன்று உலகில் இருக்கு என்று சொன்னால் அது அம்மாக்களிடம் மட்டுமே இருக்கின்றது .

உலகில் உறுதியிட்ட நிஜம் ஒன்று உண்டெனில் அது அம்மா மட்டுமே .

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

3 comments:

  1. அருமையான பதிவு.
    மின்னஞ்சலில் பெறுவதற்கான Widget (Feed Burner) சேர்த்து விடுங்கள். Email id பதிந்தால் அவர்களுக்கு சென்று விடும். மின்வெட்டினால் நிறைய படிக்க முடியாமல் போய் விடுகிறது. எனது மின்னஞ்சல் முகவரி: rathnavel.natarajan@gmail.com
    நீங்கள் பதிவு போட்டவுடன் எனக்கு அனுப்பி விடுங்கள். நேரம் இருக்கும்போது, மின்சாரம் இருக்கும்போது படித்து பின்னூட்டம் போடுகிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அம்மா !நல்லவிதமா!சொல்லிடீங்க!

    ReplyDelete
  3. Eppozhutum aduthavargal seith sathanayayum thiyagathayum matrume padithu athu patri pesi unartitukirom endrume enniyathe illai En amma enakaga seitha thiyathai..............

    ReplyDelete