Wednesday 11 July 2012

பில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை?......



ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதை நீங்க எதை வைத்து தீர்மானம் செய்வீர்கள் .அந்த படம் ஈட்டிக்கொடுக்கும் மொத்ததொகை வைத்து கணக்கிட்டு சொல்வீர்கள் .அப்படி கணக்கிட்டு நீங்க வெற்றி திரைப்படம் என சொன்னால் வெளியாகபோகும் பில்லா ரெண்டு மிகப்பெரிய வெற்றிப்படம் .ஏன் எனில் அதிகமான திரை அரங்கில் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் போட்ட பணத்தை எல்லாம் பில்லா பெற்று தந்துவிடும் .



என்னை கேட்டால் நான் ஈ திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் பில்லா ரெண்டு மிகப்பெரிய தொல்விப்படம் என்பேன் இப்பொழுதே .ஏன் என நீங்க என்னிடம் கேட்கலாம் .நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்துவிட்டு அப்புறம் பில்லா ,நான் ஈ திரைப்படம் பற்றி பேசுவோம் .

தொன்னூறுகளில் படம் வெளியாகும்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வெளியாகும் .படம் வெளியாகும் இடங்களை ஏ,பி ,சி என மூன்று செண்டர்களாக பிரித்து இருப்பார்கள் .வெளியாகும்போது ஏ மற்றும் சில பி சென்டர்களில் மட்டும் வெளியாகும் .ஒரு சென்டரில் அதிக பட்சமாக பனிரெண்டு அல்லது பதினைந்து திரை அரங்குகளில் வெளியாகும் .சராசரி படம் வெளியானால் கூட எல்லா திரை அரங்குகளிலும் கூட்டம் இருக்கும் .படம் ஐம்பது நாட்கள் ஓடிவிட்டால் அதன் பிறகுதான் பி சென்டருக்கு படம் வரும் .படம் வெளியாகி ஆறுமாதங்கள் கழித்தே கிராமப்புற திரை அரங்கை தொடும் .ஆறு மாதம் கழித்து கிராமத்திற்கு வரும் திரைப்படமே சில நேரங்களில் இருபது நாட்களை தாண்டி ஓடும்.இப்படி இருக்கும்போது இப்ப வெளியாகி மூன்றாவது நாளே படம் மிகப்பெரிய வெற்றி என சொல்லபடுகிறது .



பில்லா ரெண்டு திரைப்படம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் திரை அரங்குகளில் வெளியாரும் .மூன்று நாட்கள் திரை அரங்குகள் நிரம்பி ஓடினாலே போட்ட அனைத்து முதலும் எடுத்து விடுவார்கள் .அப்ப படம் வெற்றிதானே .

நான் இதை வெற்றி என சொல்லமாட்டேன் .அதிகப்படியான விளம்பரங்கள் செய்து படம் வெளியாகும்போதே பார்த்தால்தான் சிறப்பு என்பதுபோல ஒவ்வொருவரையும் மூளை சலவை செய்து திரைஅரங்கில் குவிய வைக்கிறார்கள் .




முன்பு படம் வெளியாகும்போது படம் சரி இல்லை என்றால் சராசரியான கூட்டம் கூடும் .சில நாட்களில் படம் தூக்கப்பட்டு விடும் .சில நேரங்களில் படம் வெளியாகி ஒரு வாரம் வரை திரை அரங்கில் கூட்டமே இருக்காது .படம் பார்த்த ஆட்கள் படம் நன்றாக இருக்கிறது என சொன்னால் வாய்மொழியாக கேட்டு கேட்டு மிகபெரிய வெற்றி அடைந்து இருக்கிறது .ஒரு தலை ராகம் ,சேது ,அஜீத் நடித்த காதல் கோட்டை போன்ற படங்கள் .இப்படி மக்கள் பார்த்து சொல்லி அதன் பிறகு நன்றாக ஓடிய படங்கள் .

இதே போல மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் நாளை விட ரெண்டாவது நாள் அதிகப்படியாக கூட்டம் கூடிய திரைப்படம் நான் ஈ .காரணம் முதல் நாள் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருக்கிறது என சொன்னதுதான் .படம் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்று சொன்னதுபோல எல்லோரும் நன்றாக இருக்கிறது என எழுதினார்கள் .பேஸ்புக்,ட்விட்டர் , ப்ளாக்கர் என எல்லா தளங்களிலும் படம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் .அப்ப நான் ஈ திரைப்படம் வெற்றிப்படம் தானே .

பில்லா ரெண்டு திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் முதல் மூன்று நாளைக்கு டிக்கெட் இல்லை என சொல்லபடுகிறது .சென்னை மாயாஜால் திரை அரங்கில் படம் வெளியாகும் அன்று எழுபத்து இரண்டு காட்சிகள் திரை இடப்படுகிறது என சொல்கிறார்கள் .இதை எல்லாம் பார்க்கும்போது படம் வெளியான மூன்றாவதுநாள் எந்திரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை பில்லா முறியடித்தது என கண்டிப்பாக விளம்பரம் வரும் .கண்டிப்பாக மிகபெரிய வசூல் சாதனையை கொடுக்கும் பில்லா .ஆனால் என்னை பொருத்தவரை இப்பொழுதே நான் சொல்கிறேன் விளம்பரங்களில் வைத்து ஒட்டப்படும் எந்தப்படமும் வெற்றிப்படம் இல்லை .அந்த வகையில் பில்லா ஒரு தோல்வி படமே

.எந்தவித அதிகபட்ச விளம்பரம் இல்லாமல் வந்து வாய்மொழியாக நல்லபடம் என சொல்லப்பட்டு இன்று வெற்றி அடைந்து இருக்கும் நான் ஈ மிகப்பெரிய வெற்றிபடமே

2 comments:

  1. பில்லாவை பற்றி தில்லா ஒரு பதிவு சூப்பர்

    ReplyDelete
  2. நான் ஈ..
    ..நல்ல திரைப்படம்....


    பில்லா ஒரு பீ......

    ReplyDelete