Friday 8 March 2013

தடம் மாறிய பெண்ணும் தடுமாறாத நானும்....



ஆறு வருடம் இருக்கும் .ஒரு நாள் கோலாலம்பூர் மஸ்ஜீத் இந்தியா எனும் இடத்தில் நான் என் தம்பி மற்றும் எங்க உறவிறனர் பையன்கள் என ஆறு ஏழு பேர் இருக்கும் சுத்திக்கொண்டு இருந்தோம் .

நாங்கள் எல்லோரும் நடந்து வந்துகொண்டு இருக்கும்போது எங்களை பார்த்த ஒரு பெண் ஓடி ஒளிந்தது .அப்ப என் தம்பி சொன்னான் ஒரு வாரம் முன்பும் நானும் இன்னொருவனும் இங்கே வந்தோம் எங்களை பார்த்துவிட்டு இதே பெண் ஓடியது என சொன்னான் .சரி வாங்க நம்மை பார்த்து யாரு ஓடுவது பார்ப்போம் என அந்த பெண் மறைந்த மைதீன் ஸ்டோர் பின்புறம் சென்றோம் .

அங்கே பார்த்த பெண் எங்கள் ஊரை சேர்ந்த பெண்தான் .என்னோடு படித்த பெண்ணின் அக்கா அது .தலை குனிந்தவாறு நின்றது .எனக்கு ஊரிலேயே அந்த பெண்ணை தெரியும் .மற்றவர்களுக்கு தெரியவில்லை .கணவர் இறந்து ஒரு பெண் குழந்தைக்கு தாயான பெண் .

வந்து நின்றது பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக .ஊரிலும் இலைமறைகாயாக அப்படிதான் அந்த பெண் இருந்தது .அந்த பெண் கொஞ்சகாலம் வீட்டு வேலை சிங்கப்பூரில் செய்து வந்ததால் என்னோடு வந்த பையனுகளுக்கு தெரியவில்லை .ஆனால் அந்த பெண் எங்க ஊர் பையன்கள் எல்லோரையும் தெரிந்து வைத்து இருந்ததால் ஒவ்வொருமுறையும் இந்த மாதிரி ஓடி ஒளிந்து இருக்கு .

அதன்பின்பு நான் கேட்டேன் ஏன் இங்கே வந்தீங்க என .கொஞ்சநேரம் மவுனமாக நின்றது .அதன்பின்பு நான் என்ன செய்ய முடியும் .ஊரில் ஒண்டியாக இருந்தபோதும் என்னை ஆண்கள் தொந்தரவு செய்யவே செய்தார்கள் .அம்மா மற்றும் பெண் குழந்தை இருக்கு .அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா என்றது .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை .

அப்புறம் சொன்னது நான் இந்த தொழில்தான் செய்யபோறேன் என தெரிந்தே வந்தேன் .ஆனால் நம் ஊரை சேர்ந்தவர்கள் இங்கே நிறைய இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை .அதுவே எனக்கு பெரிய அவஸ்த்தையா இருக்கு .யாரை பார்த்தாலும் ஓடி ஒளியுறேன் என சொன்னது .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை அதன் பின்பு .அதன் பின்பு அங்கு இருந்து சென்று விட்டோம் .

இப்ப ஊருக்கு போய் இருக்கும்போது அவங்க அம்மாவிடம் கேட்டேன் எங்கே உங்க பொண்ணு என .அவள் இறந்துவிட்டாள் என சொன்னார்கள் .அந்த பெண்ணின் சாயலிலேயே அங்கு வயதுக்கு வந்த பெண்ணாக நின்றது அந்த பெண்ணின் மகள் .
அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றவர்கள் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு விட்டார்க்கள் என சொன்னார்கள் ஊரில் .

தவறான பாதையை தேர்ந்தெடுத்து இன்று இந்த உலகத்தில் இல்லாமல் தன் குழந்தை தாயும் இன்றி தந்தையும் இன்றி தனியாக தன் பாட்டியோடு இருக்கு 

1 comment: