Friday, 10 July 2015

பாகுபலி என் பார்வையில்

பாகுபலி படத்துக்கு இரவு பணிரெண்டுமணி காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட்டேன் திரை அரங்கிற்கு வந்துவிடுங்க என நண்பர் போன் செய்தார்.தூக்கம் கெடுதே என விருப்பம் இல்லாமல் படத்துக்கு போனேன்.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு புலி படத்தின் டிரைலர் ஓடியது.ஏனோதானோ என பார்த்துக்கொண்டு இருந்தேன்.டிரைலர் முடிந்து பாகுபலி படம் ஆரம்பம் ஆனது.
டைட்டில் முடிந்தவுடன் முதல் காட்சியாக அருவியில் இருந்து விழும் நீரை காட்டும்போது நிமிர்ந்து உக்காந்தவன்தான் அதன் பின் கொஞ்சம் கூட மனதில் சோம்பல் எழாமல் படத்தை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏற்கனவே ஷங்கர் படங்களில் பிரமாணடங்கள் பார்த்து இருந்த போதும் அவை எனக்கு தினிக்கப்பட்ட பிரமாண்டங்களாக சிலவேளைகளில் தெரியும்.ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் கதையின் போக்கில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

யாருடைய நடிப்பை பற்றியும் நான் சொல்லவில்லை.அதை நீங்களே பார்த்துக்கோங்க.இயக்குனர் ராஜமெளலியும்,ஒளிப்பதிவாளரும்,சண்டைகாட்சிகளை பீட்டர் ஹெய்னும்,மரகதமணியின் பின்னனி இசையும்(பாடல்கள் தடைகற்கள்)
கலை இயக்குனரும்,சிஜி இயக்குனரும் போட்டி போட்டு வேலை பார்த்து இருக்கின்றனர்.

இரண்டாம் பகுதியில் இடம்பெறும் அந்த அரைமணிநேர போர்க்கள காட்சிகள் என்னை சீட்டின் நுனியில் உக்கார செய்தது.திரையில் அந்த அனுபவத்தை பெருங்கள்.
கதாநாயகர்கள் பிரபாஸ்,ராணா இவர்களோடு சத்தியராஜ்,நாசர்,ரம்யாகிருஷ்னன் என பலர் போட்டி போட்டு நடித்து  இருக்கின்றனர்.
இரண்டுமணி நேரம் நாற்பது நிமிடம் படம் ஓடி திடிரென 2016 ல் வாருங்கள் அடுத்த பகுதி பார்க்க என நிறைவு செய்யும் போது இன்னும் சில மாதங்கள் காத்து இருக்க வேண்டுமா என்ன நடந்தது என தெரிய மனதில் ஓடியது.

இந்திய திரை உலகை அடுத்த கட்டதிற்கு அழைத்து சென்று இருக்கும்
ராஜமெளலி குழுவினருக்கு வாழ்த்துக்கள்

Saturday, 2 May 2015

உத்தம வில்லன் _ உத்தரவாதமில்லை


ஒரு மாதத்துக்கு மேலாக உத்தம வில்லன் ட்ரைலர் படம் பார்க்க போகும்போதெல்லாம் போடுவாங்க திரைஅரங்கில்.அதை பார்த்து மிக நன்றாக இருக்கும் என நினைத்து இருந்தேன்.
கதை மிக பிரபலமான நடிகர் கமல்ஹாசனுக்கு தன் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என தெரிய வருகின்றது.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்தி நல்ல படங்களில் நடிக்க வைத்த தன் குருநாதர் இயக்கத்தில் தன் கடைசி படத்தில் நடிக்க விரும்பி சென்று பார்க்கின்றார்.குருநாதர் இயக்க மறுக்கும்போது தான் இறந்துவிட போகும் உன்மைய சொல்கின்றார்.அதன் பின் குருநாதர் இயக்கத்தில் நடிக்கின்றார்.நடிக்கும் கதை ஐந்துமுறை சாவின் விளிம்பை தொட்டும் சாகாத உத்தமன் எனும் நாடக கலைஞன் பற்றியது.


நிஜ வாழ்வில் அவர் சந்தித்த பெண்களும்,துரோகங்களும் மகன், மனைவி,டாக்டருக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பு,முதல் காதலி மூலம் பிறந்த மகள்,மகளின் இன்றய தகப்பன் என பல வகையில் கதை விரிகின்றது.
நான் இங்கே கதையாக சொல்கின்றபோது நல்லாத்தான் இருக்கு.படம் இடைவேளைவரை கூட கமல்ஹாசனின் திரைக்கதை உத்தியால் சீராக போவது போலத்தான் தெரிகின்றது.இடைவேளை முடிந்து நிஜவாழ்வு கதையும்,அங்கே படமாக்கப்படும் கதையும் மாற்றி மாற்றி காண்பிக்கும்போது மிகப்பெரும் அயற்சிக்குள்ளாகிரோம்.படம் எப்ப முடியும் என வரும் எண்ணத்தை தடுக்க முடியவில்லை.



கமல்ஹாசன் சிறந்த நடிகர்களாக நினைக்கும் அனைவரையும் படத்தில் போட்டு தன் ஆசான் பாலசந்தர் அவர்களையும்,தன்னை உறுவாக்கிய இன்னொரு சிற்பி கே.விஸ்வநாத் அவர்களையும் கவுரவிக்கும் பொருட்டு படம் எடுத்தாரோ என்னவோ?!.
பாலசந்தரின் கடைசி படமாகவும் அமைந்துவிட்டது திரை உலக வாழ்வில்.
படம் பார்க்கும் ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு வா என அழைக்க முயற்சி செய்கின்றார் கமல்ஹாசன்.அவரின் பரிசோதனை முயற்சிக்கு இந்த படம் அயற்சியை கொடுத்து விட்டது.
படம் பார்ப்பவர்கள் மிக சிறந்த படம் என சொல்லவும் கூடும்.ஒரு நாவல் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒருவித மனநிலையை கொடுக்கும்.அதே போல மற்றவர்களுக்கும் அமையலாம்.

கமலஹாசன் தெனாலி,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை கொடுக்கலாம் அல்லது குடும்ப சித்திரம் எடுக்கலாம்.அதைவிட்டு பரிசோதனை முயற்சியில் ரசிகனை பலிகொடுப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
இந்த படம் எனக்கு புரியவே செய்தது ஆனால் உங்களுக்கு புடிக்கும் என என்னால் உத்திரவாதம் செய்ய இயலவில்லை.




Friday, 26 December 2014

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

Sunday, 14 December 2014

லிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....



லிங்கா.
இது விமர்சனம் இல்லை.கடந்த மூன்றுநாளாக ஆள் ஆளுக்கு எழுதிட்டாங்க.நல்லா இருக்குன்னும் எழுதிட்டாங்க நல்லா இல்லைன்னும் எழுதிட்டாங்க.படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரியும் இப்போ. அதனால அதுவும் வேண்டாம்.இங்கு படிச்ச விமர்சனங்களால் இப்போ படம் பார்த்துவிட்டு வந்து சில கேள்விகள் தோன்றுகிறது.அது மட்டுமே.

படம் பார்க்கும் முன்பு ரஜினியிடம் என்ன எதிர் பார்த்து போனீங்க.ஒரு விஜய் நடிப்போ அல்லது அஜீத் நடிப்போ எதிர்பார்த்து போனீங்களா?.
இல்லை ரஜினியின் இன்னொரு பாட்ஷா படமோ,சிவாஜியோ அல்லது எந்திரன் படமோ எதிர் பார்த்து போனீங்களா?.
சிவாஜி படத்தின் வில்லன் சுமன் போன்றோ ,எந்திரன் படத்தின் வில்லன் ரஜினி போன்ற பவரான வில்லனை எதிர்ப்பதுபோல கதை எதிர் பார்த்து போனீங்களா?.
அனுஷ்கா,சோனாக்சியிடம் என்ன மாதிரியான நடிப்பை எதிர்பார்த்து போனீங்க.சிவாஜியில் ஷ்ரேயா,எந்திரன் ஐஸ்வர்யா நடிப்பு போன்று இருக்கனும் என எதிர்பார்த்தீங்களா?.
ஏஆர் ரஹ்மானிடம் இன்னொரு சிவாஜி,எந்திரன் படத்தின் இசையை போன்று எதிர்பார்த்து போனீங்களா?.
இதுபோல வேண்டும் என்றால் அந்த படங்கள்தான் இருக்கே அதையே பார்த்து விடலாமே?!.
லிங்கா படம் நல்லா இருக்குதான் ஆனா ஏதோ ஒன்னு குறையுது என்றால் நான் மேல சொல்லி இருப்பவற்றில் ஏதோ ஒன்று குறையுதுதானே அர்த்தம்?!.
ஈரான்,கொரியன் என உலகப்படம் பார்த்துவந்த நமக்கு லிங்கா படம் புரியவில்லையா.
நோலனின் புரியாத படம் புரிந்தகொண்ட அளவுக்கு இந்த ரஜினியின் லிங்கா படம் புரியவில்லையா?.

அல்லது கதை சொல்லும் போக்கு புடிக்கவில்லையா.
படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எழுந்து ஓடிவிட தோன்றியதா.
எது உங்களுக்கு புடிக்கவில்லை?.

நேரடியாக கதை புதியுற மாதிரி எடுத்தது புடிக்கலையா.
இரண்டாம் பகுதியில் மெதுவாக கதை சொல்லும் போக்கு நடைபெருகின்றது என சொல்றீங்களா?.இது ஆக்சன் படமாக இருந்தால் வேகமாக நகரும் திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க.ஆனா ஒரு அணை ஊருக்காக கட்டப்படும்போது அதன் போக்கில்தானே சொல்லமுடியும்.
இத்தனை வயதிலும் இவ்வளவு சுறு சுறுப்பாக ரசிகனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பதே பெரிய விசயமில்லையா?.
அடுத்த ஐந்து வருடங்களில் விஜயோ அஜித்தோ தங்களை இதுபோல நிலைநிறுத்திகொள்ள முடியுமா எனும் சந்தேகம் இருக்கும்போது முப்பத்தி ஐந்து வருடமாக கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கின்றாரே அது பத்தாதா?!.

நீங்க பாட்ஷாவையோ சிவாஜி எந்திரன் படத்தையோ எதிர்பார்த்து போனது உங்க தவறு.
ரசிக்க தெரியாதவன் சொல்வது இந்த படம் நல்லா இல்லை என.
திரைக்கதை மேஜிக் ரஜினி படத்தில் எப்போதும் இல்லாதது.அதை நீங்க ஏன் எதிர்பார்க்கனும்?.
படம் பார்க்க வருபவனுக்கு மூன்றுமணி நேரம் போவது தெரியாமல் படமாக்கப்பட்டு இருக்கா என்பது முக்கியம். அதை படம் நன்றாக செய்கிறது.
ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி பொதுவான திரைபார்வையாளனாக இதுக்குமேல் படம் எப்படி எடுக்கவேண்டும் என எனக்கு சொல்ல தெரியவில்லை.
படம் எனக்கு பிடிச்சு இருக்கு.பார்க்கதவங்க திரையில் பாருங்க.

Saturday, 29 November 2014

காவிய தலைவன் என் பார்வையில்

இசைக்காவியம்
ஒளிஓவியம்
கலையழகு

இசையமைப்பாளர் ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் கலை இயக்குனர் மூவருக்கும் வாழ்த்துக்கள்.அவ்வளவு உழைப்பு இவர்களுடையது.

படத்தின் டைட்டில் இசையிலேயே நாடக உலகுக்குள் அழைத்து சென்றுவிடுகின்றார் ரஹ்மான்.நீரவ்ஷா தன் ஒளிப்பதிவில் கலை இயக்குனரோடு சேர்ந்து கதை நடக்கும் காலகட்டத்துக்குள் நம்மை கொண்டு வந்துவிடுகின்றனர்.

சித்தார்த்தும் பிரித்விராஜும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கின்றனர்.நாசர் சித்தார்த்துக்கு ராஜபார்ட் வாய்ப்பு கொடுக்கும்போது பிரித்விராஜுகு ஏற்ப்படும் வன்மத்தில் ஆரம்பிக்கிறது இருவருக்குமான நடிப்பு.
இருவருக்குமே இந்த படம் ஒரு மைல்கல்.
நாடக கம்பெணியின் குருவாக நாசர்.இவரை விட அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்தி பார்க்கமுடியவில்லை.

வேதிகா ஏற்க்கனவே பரதேசியில் நன்றாக நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடிப்பில் இன்னும் மெருகேறி இருக்கின்றார்.

தம்பிராமையா,சிங்கம்புலி என படத்தின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்ட்டவர்கள் அத்தனை பேரும் சரியான தேர்வு.
வசந்தபாலனின் இன்னும் ஒரு மிகச்சிறந்த இயக்கம் இந்த படம்.
கதை நான் சொல்ல போவது இல்லை.திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தில் இடம்பெரும் அநேக இடங்கள் காரைக்குடியை சுற்றி உள்ள இடங்களாக இருக்கு.அந்த இடங்கள் எல்லாம் நான் நேரில் பார்த்து இருக்கின்றேன்.அதே இடத்தை திரையில் பார்க்கின்றபோது பிரமாண்டமாக இருக்கு.
வசனம் எழுதி இருப்பது ஜெயமோகன்.காட்சியின் தன்மைக்கேற்ப்ப உருத்துதல் இல்லாமல் எழுதி இருக்கின்றார்.
முடிந்த அளவுக்கு திரையில் பாருங்க.அப்பொழுதுதான் படத்தின் இசையை,ஒளிப்பதிவை,கலை இயக்கத்தை எல்லோரின் நடிப்பையும் ரசிக்க முடியும்

Wednesday, 22 October 2014

கத்தி- செம ஷார்ப்........ விமர்சனம்



கத்தி என் பார்வையில்
முதலில் முருகதாசுக்கு வாழ்த்துக்கள்.
விஜய் கதாநாயகனாக இருந்தும் ஓப்பனிங் மிக சாதரனமாக விஜயை அறிமுக படுத்தியதற்க்கும் ஓப்பனிங் பாட்டு வைக்காததற்க்கும்.
படத்தில் மூன்று சன்டைகாட்சிகள் இருந்தபோதும் இதை முழுக்க ஆக்சன் படம் என சொல்ல முடியாது.
படத்தின் பாடல்கள் நன்றாக இருந்த அளவுக்கு பின்னனி இசை கொஞ்சம் பத்தாதுதான்.இருந்தும் ஓகே.
ஒளிப்பதிவு நன்றாக இருக்கு.கதைக்களத்தின் மூடுக்கேற்ப்ப ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.
நடனம் மிக நன்றாக இருக்கு.சொல்லவே வேனம் நடனத்தில் தன்னை அடிச்சுக்கு ஆளே இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கின்றார்.
சமந்தா ஒரு கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அதை மட்டும் செய்கின்றார் கொஞ்சம் அழகாக இருக்கின்றார்.
அனல் அரசுவின் சன்டை அனல் பறக்கின்றது.அதுவும் எதிர்பாரமல் திடிரென நடக்கும் அந்த முதல் சண்டை அபாரம்.


சரி இனி கதைக்கு வருவோம்.
ஜெயிலில் இருந்து ஒரு கைதி தப்பிக்கின்றார் அறிமுக காட்சியில்.அவனை பிடிக்க அங்கே கைதியாக இருக்கும் பிராடு விஜய் உதவியை நாடுகின்றனர் போலீஸ்.
அவரும் சரியாக கைதி இருக்கும் இடத்தை போலிஸோடு சுற்றிவலைத்து பின்பு போலிஸ் பார்க்கும்போது கைது செய்ய உதவிய விஜய் போலிசிடம் இருந்து தப்பிவிடுகின்றார்.

தப்பிய விஜய்(கதிரேசன்) தன் நண்பனின் உதவியை நாடுகின்றார் போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்துக்கு தப்பி செல்ல.அவரும் பாஸ்போர்ட்க்கு ஏற்ப்பாடு செய்து ஏர்போர்ட்டில் தாய்லாந்து செல்ல காத்து இருக்கும்போது அங்கே சமந்தாவை பார்க்கின்றார்.அவரையே பார்க்கும்போது சமந்தா தன் நம்பரை கொடுத்து போன் செய்ய சொல்லி சென்று விடுகின்றார்.சமந்தாவுக்காக தாய்லாந்து செல்லாமல் டிக்கெட்டை கிழித்து எறிந்து விடுகின்றார்.
விஜயும் அவரின் நண்பனும்(சதீஷ்) இரவில் சமந்தா கொடுத்த நம்பருக்கு போன் செய்கின்றனர்.அது வேரொறு நம்பருக்கு போகின்றது.ஏமாந்துவிட்டோம் என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் ஒரு லாரி மோதி நிக்கின்றது.அந்த லாரியை தொடர்ந்து வரும் காரில் இருந்து நாலைந்துபேர் இறங்கி காருக்குள் இருப்பவரை சுட்டுவிட்டு செல்கின்றனர்.


காருக்குள் இருப்பவர் யாரெனெ விஜய் ஓடிவந்து பார்க்கும்போது அங்கே குண்டடிபட்டு இன்னொரு விஜய்(ஜீவா) கிடக்கின்றார்.அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும்போது விஜய்க்கு(கதிரேசன்) ஒரு யோசனை வருகின்றது.அதுபடி ஜீவாவின் பொருட்க்களை எடுத்துக்கொண்டு தன் பர்சை அங்கே விட்டுவிடுகின்றார்.போலிஸ் மறுபடியும் ஜீவாவை கதிரேசன் என நினைத்து ஜெயிலுக்கு கொண்டு போய்விடுகின்றனர்.
மறுநாள் கதிரேசனும் அவரின் நண்பனும் மறுபடியும் தாய்லாந்து போவதர்க்காக பேசிக்கொண்டு செல்கையில் அந்த வழியாக வரும் கலேக்டர் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏறசொல்லி உன் பெயருக்கு 25லட்சரூபாய் செக் வந்துவிட்டது என சொல்லி ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டுபோய்விடுகின்றார்.செக்கை ஆசையாக வைத்து இருக்கும் விஜயிடம் இருந்து பிடுங்கி ஒரு முதியவர் கிழித்துவிடுகின்றார்.கிடைத்த பணம் போச்சே என இருக்கும்போது பேட்டி எடுக்க வந்த இரண்டு வெளிநாட்டு பெண்களால் கதிரேசன்(விஜய்) தாக்கப்படுகின்றார்.அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகின்றார்.

மறுபடியும் கதிரேசன் வில்லன் ஆட்க்களால் கடத்தி வில்லன் இருப்பிடம் கொண்டு செல்லப்படுகின்றார்.அங்கே வில்லன் பேரம் பேசுகின்றார்.25கோடி தருகின்றேன் கோர்ட்டில் நடக்கும் கேசை வாபஸ் வாங்கு மற்றும் நாலு பேரிடம் கையெழுத்து வாங்கிட்டு வா என அட்வான்சாக 5கோடி ரூபாய் கொடுக்கின்றான் வில்லன் கதிரேசனை ஜீவா என நினைத்து.கதிரேசனும் சரியென பணத்தை வாங்கி கொண்டு வருகின்றார்.
நண்பனிடம் செய்யப்போகும் வேலைக்கு 25கோடி பணம் அட்வான்ஸாக 5கோடி வாங்கிவிட்டேன் என சொல்லும்போது முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகின்றது.
உனக்கு ரோட்டரி சங்கத்தில் விருதும் 4லட்சம் பணமும் கொடுக்கின்றார்கள் என சொல்ல அந்த பணத்தையும் வாங்கிவிடுவோம் என நண்பன் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களோடு விழாவிற்க்கு செல்கின்றார்.அங்கே விஜய் யார் என திரைப்படம் திரையிடப்படுகின்றது.அதோடு அந்த நாலு லட்சரூபாய் யார் யாரல் கொடுக்கப்பட்டது என சொல்லுகின்றார்கள்.
இதற்க்குமேல் திரையில் கதையை பார்த்துக்கொள்ளுங்கள்.
விஜய்க்கு எந்த பஞ்ச் வசனமும் கொடுக்கபடவில்லை இடைவேளையின்போது வரும் ஐயாம் வெயிட்டிங் எனும் வசனம் தவிர.
மிக இயல்பாய் நடித்து இருக்கின்றார்.
கடைசிக்கட்ட போரட்டம் மிகையாக இருந்தாலும் கூட எதுவும் சாத்தியமே என படுகின்றது.


கிராமத்து விவசாயின் நீராதாரம் பற்றியும்,அதை உறிஞ்சும் கார்ப்பரேட் கம்பெணிகள் பற்றிய கதை இது.
மீடியாக்களின் ஸ்லாட் பற்றி அப்பட்டமாக பேசப்படுகின்றது.
கிங்பிஷர் பீர் கம்பெணிக்காரனின் கடன் பற்றியும் பேசப்படுகின்றது.
சென்சார் இதை எல்லாம் கட் செய்யாமல் விட்டதுக்கு அவர்களுக்கும் நன்றி சொல்லனும்.
இது விஜய் படம் என்பதை விட மிக அவசியமான படமும் கூட.
விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்.
யார் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் எழுதலாம்.
ஆனால் நீங்க போயி திரை அரங்கில் பார்த்து விமர்சனம் எழுதுங்க.
விஜய்க்கு இன்னொரு மைல் கல் கத்தி.
ஆனால் இன்னொரு துப்பாக்கி அல்ல இந்த படம்.

Friday, 20 December 2013

வெங்கட் பிரபு சமைத்த பிரியாணி- சாப்பாடு திருப்தி......ஏவ்வ்வ்வ்வ்வ்வ்......



மதியம் ரெண்டுமணிக்கு பின்பே பேஸ்புக்கில் பிரியாணி படம் வெளியானதே தெரியும் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் எப்போதும்போல பிரியாணி சாப்டுவிட்டு பேஸ்புக் பார்த்தபோதுதான் திரை அரங்கிலும் கண்ணுக்கும் காதுக்கும் பிரியாணி விருந்து இருக்கு என்பது தெரிந்து அவசர அவசரமா மூணுமணி காட்சிக்கு ஓடினேன் .டிக்கெட்டும் கிடைச்சு படமும் பார்த்து இதோ அதைப்பற்றி என் மடிக்கணினி மூலம் உங்களிடம் சொல்ல வரேன் .

ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு பாணியில் படத்தை இயக்குவார்கள் .வெங்கட் பிரபுவோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ,திரைக்கதையில் மெனக்கெடாமல் ,ஒரே ஆர்டரில் படம் எடுக்காமல் போகிற போக்கில் கதை சொல்லி வெற்றி ஏற்றதுபோல இந்த படத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் .

கதை என இடைவேளை வரை எதுவுமே இல்லை .படம் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கு .திரை அரங்கில் இடைவேளை சிரிச்சுகிட்டே இருந்தாங்க .நானும் சிரிச்சுகிட்டே இருந்தேன் .கதைக்குள் போகாமல் முதல்பகுதியை சிரிப்பாகவே நகர்த்தி விட்டார் .

கதை இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு ஆரம்பிக்கிறது .ஆம்புருக்கு கடை திறப்பு விழாவிற்கு வந்து விட்டு இரவு பார்ட்டியில் மது அருந்தி திரும்பும் வழியில் கார்த்திக் பிரியாணி சாப்பிடவேண்டும் என்கிறார் .எப்பொழுது மது அருந்தினாலும் அதற்க்கு சைட் டிஷ் பிரியாணிதான் சாப்டுவேன் என பிரியாணிக்கு பேர் போன ஆம்பூரில் பிரியாணி கடை தேடி அலைந்து ஒரு கடையில் சாப்பிடுகிறார்கள் .அப்ப அங்கே அழகிய இளம்பெண் ஒருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார் .அவரை பின்தொடர்ந்து கார்த்திக்கும் ,பிரேம்ஜியும் செல்ல பின்பு அந்த பெண்ணோடு தங்கி மது அருந்துகிறார்கள் .காலையில் அதிகப்படியான போதையில் கார்த்திக் மட்டும் காரில் இருக்க பின்பு இரவு தங்கிய ஹோட்டலுக்கு பிரேம்ஜியை தேடி போக அங்கெ ஒரு துப்பாக்கியும் ரத்த கரைகளும் இருக்க அங்கே இருந்து இருவரும் தப்பிக்க தங்கள் காரிலேயே நாசரின் பிணம் இருக்க அந்த கொலைப்பலியில் இருந்து எப்படி தப்பிக்கிறாங்க என அதிரிபுதிரியாக சொல்லி இருக்காங்க .

படத்தின் கடைசிவரை யார் கொலையாளி என்பது தெரியாமல் படத்தை நகர்த்தி இருக்கின்றார் வெங்கட் பிரபு .கொலையாளி யார் என்பது தெரியாமல் என்ன படத்தை முடிக்கபோறாங்க என நினைக்கும்போது கடைசிக்காட்சியில் முடிச்சு அவிழும்போது அட இவரா வில்லன் என தோன்றுகிறது .இதே போல நிறைய படங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழுக்கு வித்தியாசமா இருக்கு .இன்னும் ரெண்டுநாளில் இது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி என யாரேனும் சொல்லக்கூடும் .அதையெல்லாம் கண்டுக்காம படம் பாருங்க போரடிக்காமல் போகும் .

கார்த்திக்கு இந்த படமும் ஓடாமல் இருந்து இருந்தால் அப்புறம் எல்லா படமும் பனால்தான் .தப்பித்து விட்டார் .சண்டை காட்சிகளில் நன்றாக உழைத்து இருக்கின்றார் .நன்றாக சண்டை அமைக்கபட்டு இருக்கு .கொஞ்சம் நடிக்கவும் செய்து இருக்கின்றார் .
ஹன்சிகாவுக்கு கதாநாயகி அதிகபட்சமா என்ன செய்வாரோ அதுவே இப்படத்திலும் .
பிரேம்ஜிக்கு நடிக்கவே வரவில்லை என்றாலும் ஏனோ சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .கதாநாயகனுக்கு இணையாக படம் முழுதும் வருகின்றார் .உபயம் அண்ணன் இயக்குனர் .

ஏகப்பட்ட நடிகர்கள் நடிச்சு இருக்காங்க .இவ்வளவு போரையும் வேலை வாங்கி இருக்கார் .ஒவ்வொரு சீனில் யார் தலைகாட்டினாலும் அந்த இடத்திற்கு அவர்கள் தேவையாக இருக்கு .
உமா ரியாஜ் சண்டை எல்லாம் போட்டு நடிச்சு இருக்கார் .சமீப காலங்களில் இந்த அளவுக்கு சண்டை போட்டு நடித்த பெண் யாரும் இருக்காங்களா என தெரியவில்லை .
இசை யுவன் .நன்றாக இருக்கு .
ஒளிப்பதிவும் ஓகே .சண்டைகாட்சிகளும் ஓகே .
படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் ஒரிஜினல் பெயர்கள் வேறு கதாபாத்திரங்களுக்கு சூட்டபட்டு இருக்கு .இது யதார்த்தமா அமைந்ததா அல்லது இயக்குனர் யோசித்ததா என தெரியவில்லை .

சின்ன சின்ன ஐடியாக்களால் படம் முழுவதும் தோரணமாக கோர்த்து ரசிக்கும் விதமாக படம் இயக்கி இருக்கின்றார் வெங்கட் பிரபு.

காமடியும் ,அதிரி ஆக்சனும் கலந்த படமாக வந்து இருக்கு பிரியாணி .

பிரியாணி சீரகசம்பா பிரியாணி .முழு ப்ளேட் சாப்ட்ட திருப்தி .

Saturday, 2 November 2013

அமர்க்களமான, அட்டகாசமான “ஆரம்பம்”


அஜீத் ரசிகர்களுக்கு இது தல தீபாவளிதான் சந்தேகமே இல்லை .யார் சொல்வதையும் கேக்காமல் திரைஅரங்கில் சென்று விசில் அடிச்சு கொண்டாடலாம் அஜீத் ரசிகர்கள் .

நேற்று என்னால் படம் பார்க்கமுடியவில்லை அதனால பேஸ்புக்கில் வந்த விமர்சனங்களை படித்துக்கொண்டு இருந்தேன் .அப்ப்பப்பா இவர்களின் விமர்சன பார்வையை என்ன சொல்வது .ஆங்கில பட காப்பி .முக்கால்வாசி படத்துக்கு பின்பு சரி இல்லை .நயன்தார செத்து போகிறார் என கதை கதையா அடிச்சு விட்டத படித்தபோது எனக்கே திரை அரங்கம் செல்வோமா வேணாமா என ஒரு குழப்பம் வந்துவிட்டது .

இது உலகப்படம் இல்லை லாஜிக் மேஜிக் எல்லாம் பார்த்து எடுக்க .அஜித் ஆர்யா எனும் இரண்டு குதிரைகளுக்கு சரியான தீனி போடவேண்டும் .அதை இயக்குனர் சரியாகவே செய்து இருக்கார் .

கதை நாம எப்பவும் செய்திகளில் பார்க்கும் படிக்கும் ஊழல் ,பேரம் பேசுதல்தான் கதை .எல்லா காலங்களிலும் இதை ஒட்டி எடுக்கப்படும் படம் வந்துகிட்டே இருக்கு .அதுனால கதை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை .இங்க நிறைய பேர் கதை எழுதிக்கிட்டு இருக்காங்க அதுனால அது வேணாம் .


 

அஜீத் நடிப்பைப்பற்றி எப்பொழுதும் இப்படி விமர்சனம் வரும் நடந்துகிட்டே இருக்கார் என .இதிலும் அப்படித்தான் ஆனால் ரசிக்கும்படி நடக்கிறார் .சில இடங்களில் அவர் வசனம் பேசும்போது அஜித் ரசிகர்களுக்கு தன்னையறியாமல் விசில் அடிக்க வரும் .
ஆர்யாவுக்கு இடம் கொடுத்து நடித்து இருக்கிறார் .இது பெரிய விஷயம் .

ஆர்யா மிக சரியாக பொருந்தி போகிறார் அவரது கதாபாத்திரத்துக்கு .இரண்டு ஹீரோ ஒன்றாக பயணிக்கும்போது அது உருத்தக்கூடாது.அஜித் ஆர்யாவை நடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதால் கிடைக்கும் கேப்களில் ஸ்கோர் செய்துவிடுகிறார் .






நயன்தாரா முகம் பார்க்க முடியவில்லை முதிர்ச்சி தெரிகிறது என நேற்று நிறையப்பேர் எழுதி இருந்தாங்க .அது என்னங்க ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகைகளை புகழும்போது அவர்கள் வயது மட்டும் தெரியவில்லை இவர்களுக்கு .நாற்ப்பது வயதுக்குமேல் இருக்கும் ஆங்கிலப்பட நடிகைகளுக்கு .நன்றாகவே அஜீத் ஆர்யா இருவரோடும் சேர்ந்து நடித்து இருக்கின்றார் .

படத்தின் ஒளிப்பதிவு ,இசை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .ஏழு புள்ளி ஒன்று டிஜிட்டல் சிஸ்டம் உள்ள திரை அரங்கில் பார்த்தேன் .மிக துல்லியமாக இருந்தது சவுண்ட் .யுவன் நன்றாக பின்னணி இசை அமைத்து இருக்கின்றார் .

ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெறிகிறது .சண்டைக்காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு விருந்து .

கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடகதன்மைதான் இருந்தும் அங்கே அஜீத் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை .

எனக்கு திரைக்கதை பற்றி எல்லாம் தெரியாது அதைப்பற்றி பேச .என்னை திரை அரங்கில் கடைசிவரை உக்காரவைக்கிறதா என மட்டுமே பார்ப்பேன் .அப்படி பார்க்கும்போது கடைசிகாட்சி வரை ரசிக்க முடியும் .

மொத்தம் திரை அரங்கம் சென்று பாருங்கள் .

ஆரம்பம் முதல் முடிவரை அமர்க்களமாய் இருக்கும் உங்களுக்கு

Monday, 30 September 2013

ராஜா ராணி


ஒரு கல்யாணம்.ரென்டு காதல்.ஒரு முடிவு.
படம் தொடக்கமே எங்கோ வெறித்து பார்த்தபடி ஆர்யா நயன்தாரா இருக்க அவர்கள் இருவருமே மனதளவில் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது அவர்கள் இருவருக்கும்.
முதலிரவு தொடங்கி ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்குவதுமாக இருக்கின்றார்கள்.ஆர்யாவின் செயல்களால் மனம் உடைந்து அழும்போது நயன்தாராவுக்கு முடியாமல் வந்துவிடுகிறது.ஆர்யா நயன்தாராவை மருத்துவமனையில் சேர்க்கிறார்.பின்பு இதற்க்கு முன்பு உங்களுக்கு இது போல நடந்து இருக்கா என கேக்கும்போது அங்கே தொடங்குகிறது ஜெய்க்கும் நயந்தாராவுக்குமான கதை.மிக அழகியழோடு படமாக்கப்பட்ட காதல் கதை.அதை நான் இங்கே சொல்ல போவது இல்லை.திரையில் பாருங்கள்.நயந்தாரா அழகாகவும் அதே அளவு நடிப்புமாக கலக்கி இருக்கின்றார்.ஜெய்யும் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.இவர்கள் இருவருக்குமான கதையில் மிக அழகாக பொருந்தகூடிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நயன்ந்தாரா அப்பாவாக.மொத்தத்தில் ஒரு சிறந்த சிறுகதை படத்தின் முதல் பகுதி.


படத்தின் இரன்டாம் பகுதியும் காதல் கதைதான்.நஸ்ரியாவின் துள்ளல் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் நன்றாக இருக்கு .முதல் பகுதி போல இரண்டாம் பகுதி வேகம் இல்லையெனினும் நஸ்ரியாவின் சிரிப்பும் ,இடை இடையே சந்தானம் கோஸ்ட்டி அடிக்கும் கூத்துமாக நகர்கிறது.
இந்த இரண்டு காதலின் முடிவும் ஒரு தோல்வியில் முடிந்து ஒரு கல்யாணத்தல் இனைந்து இருவரும் ஒன்றமுடியாமல் இருப்பதும் பின்னர் இனைவதும் கதை.

க்லைமாக்ஸில் ஜெய் திரும்ப வருவதும் ஆர்யாவிடம் பேசும் அந்த நாலுவரி வசனமும் படத்தின் திருப்புமுனை என இயக்குனர் நினைத்து இருந்தாலும் அது எரிச்சலையே தருகிறது.
நயன்ந்தாரா,நஸ்ரியா இருவரும் முழுப்படத்தையும் தாங்குகிறார்கள்.மற்றபடி படம் நிச்சயம் திரை அரங்கில் பார்க்கலாம்.


அட்லீக்கு முதல்படம் இது.நல்ல இயக்கம்.அடுத்த படம் நிச்சயம் இதைவிட நன்றாக தருவார் எனம் நம்பிக்கை தருகிறது இந்த படம்.இசை வழக்கம் போல. ஒளிப்பதிவு அருமையா இருக்கு.
படத்தின் சின்ன சின்ன காட்சிகலாக செதுக்கி நன்றாக இருக்கு.சில காட்சிகள் மனதில் நிற்க்கும்.
திரை அரங்கம் சென்று பாருங்கள்.
ராஜா ராணிக்கு ராணி ராஜாவுக்கு

Saturday, 7 September 2013

வருத்தம் மறந்து சிரிக்க வைக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்



ஒரு படம் உங்களை என்ன செய்யனம்.கவலைகள் மறக்கடிக்க செய்யனும்.அதை நன்றாகவே இந்த படம் செய்கிறது.

கதையெல்லாம் நான் சொல்ல தேவையும் இல்லை ,அப்படி ஒன்றும் புதுமையான கதையும் இல்லை.லாஜிக் ,மேஜிக்,திடிர் திருப்பம் என எதுவுமே இல்லை.ஆனாலும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

சிவகார்த்திகேயன்,பரோட்டா சூரி இருவரும் செய்யும் அதகளமே தியேட்டரை அதிர செய்கிறது.படம் பார்த்துக்கொண்டு இருந்த அனைவருமே சிரித்ததை பார்த்தேன்.

சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மனநிலை நன்றாக தெரிந்து இருக்கிறது.தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.அவர் பேச ஆரம்பித்தாலே நாம் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.பக்கபலமாக சூரி வேறு இருக்கிறார்.வானவேடிக்கை நடத்தி இருக்கின்றனர்.வடிவேலு பார்த்திபன் போல சிவகார்த்திகேயன் சூரி இருவரையும் சொல்லலாம்.




கதாநாயகி புதுமுகம் போலருக்கு.பக்கத்து வீட்டு பெண்ணைப்போல இருக்கிறார்,நன்றாக நடித்தும் இருக்கிறார்.






சத்தியராஜ் அறிமுக காட்சியில் கைது செய்யப்படும்போது சீரியசாக நினைத்து பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் அதுவும் காமடியிலேயெ முடிகிறது.அவரின் அல்லக்கைகள் நாளு பேரின் பாராட்டிலேயே இவரும் லொல்லடிக்கிறார்.




ஆரம்பத்தில் இரன்டொரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இளசுகளின் கைதட்டலை பிந்து மாதவி அள்ளி செல்கிறார்.மறைந்த சில்க் ஸ்மிதாவின் பார்வையை அப்படியே பிரதிபலிக்கிறா

பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் ஆனதுதான்.நன்றாகவே இருக்கு.ஒளிப்பதிவு பாலசுப்ரமனியெம் அதிகமாக மெனக்கெடவில்லை.இந்த படத்திற்க்கு மெனக்கெடவேன்டியதில்லை என அளவாக முடித்துக்கொண்டார்.
வசனம் ஓகே ஓகே இயக்குனர் .ஸ்டேன்டப் காமடி மாதிரி போகிற போக்கில் சிரிக்கவைக்கவேண்டும் என எழுதி இருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் கருத்து குத்து எதுவும் இல்லாமல் அட்வைஸ் செய்யாமல்.நிச்சயம் திரை அரங்கில் போய் படம் பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.

வருத்தபடாமல் ,மனம் நொந்து போகமல் விழுந்து சிரிக்க ஒரு படம்

Tuesday, 13 August 2013

தலைவா.............. தடைபோட ஒன்றுமில்லை.......



தலைவா............

விமர்சனம் எழுதும் முன்பு ஒரு செய்தி.நான் விஜய் ரசிகன்.ஆனால் இந்த விமர்சனம் அதை தான்டி எழுதும் நிலை உள்ளது.

அமலாபால் அழகாய் இருக்கிறார்.ஆஸ்த்ரேலியா அழகா இருக்கு.நீரவ்ஷா ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கு.சன்டை காட்சிகளும் நல்லா இருக்கு.விஜய் நடிப்பும் கூட ஓகேதான்.ஆனால் இது மட்டும் போதுமா ஒரு படத்துக்கு.

நாயகன்,தளபதி,பாட்ஷா,தேவர்மகன் என தமிழ் படங்களின் சில காட்சிகளை மாத்தி எடுத்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாமல் போய் விடுமா என்ன.




நாயகன் படத்தின் கமல் வேடத்தை சத்தியராஜும்,கமலை சுட்டுக்கொல்லும் அந்த மனவளர்ச்சி குன்றியவர் வில்லனாகவும் படத்தில் இடம் பிடித்து உள்ளனர்.அனேக காட்சிகள் பாட்ஷா ,மற்றும் தளபதி படத்தின் மறு ஆக்கம்.

படம் ஆரம்பித்து இடைவேளைவரை ஆஸ்த்திரேலியாவில் ஆமை போல நகர்கிறது.அமலாபால் அழகை கான்பிப்பதற்க்காக இவ்வளவு செலவா.காதல் காட்சிகள் ஒட்டவே இல்லை மனதில்.சந்தானம்
வாயசைத்து செல்வதற்க்கு எதற்க்கு இந்த படத்தில்.





சத்தியரஜ் சிகப்பு துன்டை குறுக்கே போட்டு வசனம் பேசி செல்கிறார்.
கருப்பு ஆடாக பொன்வன்னன்.
பாடல் காட்சிகள் செட்டிங் எல்லாமே நாயகன் படத்தை நினைவு படுத்துகின்றன.





விஜய் நன்றாக நடித்து இருக்கிறார் என சொன்னாலும் அன்டர்ப்ளே செய்து நடிக்கிறேன் என சில இடங்களில் எரிச்சலையும் வரவழைத்துவிடுகிறார்.

மொத்தம் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் மொத்த படத்தையும் பொருமையாகத்தான் பார்க்கவேன்டும்.
விஜய் ரசிகர்களுக்காக எந்த காட்சிகளும் படத்தில் இல்லை வாங்கனா வனக்கங்கனா பாட்டை தவிற.
நான் மறியான் போன்ற மிக ஸ்லோவான படத்தையும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.ஆனால் விஜய் ரசிகனாக இப்படி ஒரு ஸ்லோவான படத்தை ரசிக்க முடியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் எதற்க்காக திரையிடவிடாமல் செய்து இருக்காங்க என தெரியவில்லை

Monday, 8 July 2013

சீறிய சிங்கம்லே சூர்யா.........




கொஞ்சநாளாக புதிய டிரென்ட் என வெறும் காமடி படங்களாக வந்துகொண்டு இருந்தது .சில படங்கள் சினிமாவில் உதவி இயக்குனராககூட வேலை செய்யாமல் குறும்படங்கள் எடுத்த அனுபவத்தில் படம் எடுத்து நன்றாக ஓடியது .அந்த படங்களை தூக்கிவைத்து கொண்டாடவும் செய்தனர் .அதை ஒற்றி பெரிய இயக்குனர்கள் கூட நகைச்சுவை படம் எடுத்தனர் .கடைசியாக வந்த தில்லு முள்ளு ,தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களும் நகைச்சுவை படங்களே .என்னதான் திரை அரங்கில் சென்று படம் பார்த்து சிரித்துவிட்டு வந்தாலும் அதில் ஒரு என்ட்டர்டிரைனர் இல்லாது போலவே இருந்தது .இதுவே டிரென்ட் ஆகிருமோ என இருக்கும்போது சரியாக களத்தில் சிங்கம் .

சூர்யா கடைசியாக வந்த இரண்டு படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால் கட்டாய வெற்றி தேவை பட்டது .இயக்குனர் ஹரியோடு சேர்ந்து சொல்லி அடிச்சு இருக்கார் சிங்கம் இரண்டாம் பாகம் மூலம் .



படம் ஆரமிக்கும்போது சிங்கம் முதல் பகுதியின் சில காட்சிகளோடு ஆரம்பிக்கிறது .படத்தின் முதல் பகுதியில் விஜயகுமார் சொன்னது போல போலீசாக இல்லாமல் பள்ளிகூடத்தில் என் சி சி ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடி கடற்க்கரையோரங்களில் ஆயுத கடத்தல் நடைபெறுகிறதா என கண்காணித்து வருகிறார் .வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிஹா மாணவியாக இருக்கிறார் .ஹன்சிஹாவுக்கு சூர்யா மேல் காதல் வருகிறது .

அதே ஊரில் இருக்கும் இருவர் பரம விரோதியாக இருக்கின்றனர் .ஒருவர் நல்லவர் .ஒருவர் கேட்டவர் .அந்த நல்லவர் ஹன்சிஹா சித்தப்பா .
ஆயுத கடத்தல் என நினைத்து வேவு பார்க்க போன இடத்தில் அங்கே நடப்பது போதை மருந்து கடத்தல் என தெரிய வருகிறது .இந்த போதை மருந்து கடத்துபவர்கள் பரம விரோதியாக கருதப்படும் இருவரும் ஒன்றாக சேர்ந்து என சூர்யாவிற்கு தெரிய வருகிறது .

இவர்களின் மிக முக்கியமான ஆளை கைது பண்ணும்போது அங்கே ஒரு நைஜீரியனும் கைது செய்ய படுகிறான் .அவனை இரவோடு இரவாக ஜெயிலை உடைத்து தப்பிக்க வைக்கிறார்கள் .அவனை பற்றி ஆராயும்போதுதான் தெரிகிறது அவன் ஒரு இண்டர்நேசனல் போதை பொருள் கடத்தல் காரன் என .இவ்வளவுதான் கதை .

மிக சாதாரண கதைதான் .படம் ஆரம்பித்து மெதுவாக நகரும் .காமடிக்கு சந்தானம் வருவார் .ஹன்சிஹா துரத்தி காதலிக்க அதை மறுத்துக்கொண்டு இருப்பார் சூர்யா .வில்லனின் அடியாள் தம்பியை பப்பில் வைத்து ஒருவர் அடித்துவிட அவரின் தங்கையை கடத்தும்போது வேகம் எடுக்கும் படம் இருதிகாட்சிவரை தடதடத்து ஓடிக்கொண்டே இருக்கும் .
முன்பகுதியில் வந்த முக்கியமான கதாபாத்திரம் அத்தனையும் சரியான இடத்தில் வருமாறு கதை அமைத்து இருக்கின்றார் .படத்தில் வரும் எந்த வசனமும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது .

சண்டைகள் நன்றாக படம் ஆக்கபட்டு இருக்கு .சண்டைகள் படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது .எல்லா சண்டை காட்சியிலும் முந்திய படத்தில் ஒரு கையை உயர்த்தி ஓங்கி பிடரியில் அடிப்பது போல கவனமாக சேர்த்து இருக்காங்க .சண்டை காட்சிகள் நிச்சயம் அதிரி புதிரியானவை .





பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .சூர்யா விஜய் போல ஆட முயற்சித்து இருக்கிறார் .அவரது உயரம் அதற்க்கு தடையா இருக்கு .அனுஷ்கா அழகு பதுமையாக வந்து போகிறார் .கதையின் ஓட்டத்துக்கு ஹன்சிஹா உதவியாக இருக்கிறார் .இந்த படத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார் ஹன்சிஹா .

வில்லன்கள் பிரகாஷ்ராஜ் அளவுக்கு இல்லை .இருந்தும் பரவா இல்லை .படத்தின் நிறைய காட்சிகள் அந்தரத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்யபட்டு உள்ளது .பிரியன் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் .

படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் சூர்யா ஒற்றை ஆளாக அவ்வளவையும் சுமந்து நடித்து இருக்கின்றார் .சூர்யாவிற்கு நிறைவான படம் இரத்து .

இயக்குனர் ஹரிக்கு படம் பார்க்க வருபவர்களின் ரசனை எப்படி இருக்கும் என தெரிந்து இருக்கு .வசனத்தை பற்றி இந்த கவலையும் இல்லாமல் பரபர திரைக்கதையால் சூர்யா ஓடிக்கொண்டு இருக்க நம்மையும் சேர்ந்து சூர்யோவோடு ஓடுவது போல ஆக்கி இருக்கார்.அதுதான் ஹரியின் பலம் .

நகைச்சுவை படம் பார்த்து அலுத்து இருந்த நேரத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சிங்கம் வந்து இருக்கு .

சிங்கம் சீறும்

Thursday, 13 June 2013

கொஞ்சம் எழுதலாம்

மிக நீன்டநாட்க்கள் ஆகிவிட்டது ப்ளாக்கரில் எழுதி.இனிமேல் அவ்வபோது இங்கே எட்டிபார்த்து கொஞ்சம் எழுதும் எண்ணம் இருக்கிறது.எப்பொழுதும்போல உங்கள் ஆதரவு இருக்கும் எனும் நம்பிக்கையில் எழுதபோகிறேன்

Friday, 15 March 2013

கதையை சொல்ல மாட்டேன் -பரதேசி !!!!!


படத்திற்கு விமர்சனம் எப்படி எழுதுவது என தெரியவில்லை .நான் கதைக்குள் செல்ல விரும்பவில்லை .இந்நேரம் உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்து இருக்கும் .ப்ளாக்கரில் அல்லது பேஸ்புக்கில் படத்தின் கதையை விரிவாக குறை சொல்லியோ அல்லது நல்லதாகவோ எழுதி இருப்பார்கள் .ஆகவே விரிவாக கதைக்குள் நான் பயணிக்கவில்லை .

இன்று படம் வெளியாகும் வரை படத்தின் விளம்பர முன்னோட்டம் பார்த்து பாலாவை விமர்சனம் எனும் போர்வையில் கஞ்சி காய்சியவர்களை முதலில் இந்த படத்தை பார்ப்பதற்கு பணிக்கவேண்டும் .

படத்தின் கதையை போலவே இன்றும் வேறுவிதமான கொத்தடிமைத்தனம் ஒன்று சத்தமில்லாமல் தமிழக கிராமங்களில் நடக்கிறது .தாலிக்கு வேலை {சுமங்கலி திட்டம் }.

கிராமங்களுக்கு ஏஜண்டுகள் வந்து முன்பணம் கொடுத்து படிப்பை நிப்பாட்டிய பெண்களை வேலைக்கு அழைத்து செல்கிறார்கள் .இப்பொழுது நடப்பது நவீன கொத்தடிமை .

முதல் படம் வந்து பதினாலு வருடங்கள் .இந்த பதினாலு வருடங்களுக்குள் மொத்தம் ஆறு படம் மட்டுமே .நினைத்தால் வருடத்திற்கு ஒரு படம் எடுத்து இருக்கலாம் .சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுப்பதால் வெறும் ஆறு படம் மட்டும் .

எடுத்த படம் அத்தனையும் விளிம்புநிலை மனிதர்களை மட்டுமே பேசியது .இதற்க்கு முன்பு வந்த படங்களில் இறுதிக்காட்சி மிக அகோரமாய் இருக்கும் .நான்கு படங்களில் பைத்தியத்துக்கு அருகில் உள்ள நிலைமையில் இருக்கும் கதா பாத்திரம் .அவன் இவன் படம் எடுக்கும்போதே படம் பார்க்கும் நீங்க பாலாவை வெறுப்பீர்கள் என சொல்லியே எடுத்தார் .அதே மாதிரி விமர்சனம் எனும் பேரில் நாம் துவைத்து எடுத்துவிட்டோம் .

பரதேசி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை எனக்கு .படம் டைட்டில் ஆரம்பித்ததில் இருந்து படம் முடியும்வரை ஏதோ என்னை ஆட்க்கொண்டது போல காட்சிகள் கடந்து கொண்டு இருக்கும்போது பொசுக்கென கண்ணீர் துள்ளிகள் அடிக்கடி எட்டி பார்த்துக்கொண்டே இருந்தது .

அதரவா இந்த கதைக்கான முகச்சாயல் இருப்பதாலேதான் பாலா தேர்ந்து எடுத்து இருப்பார் போலருக்கு .வாழ்ந்து இருக்கின்றார் .வேதிகா அழகான பொம்மையாக வந்து போனவரை எவ்வளவு அழகாக செதுக்கி எடுத்து இருக்கிறார் .எல்லா நடிகர் நடிகைக்குள்ளும் பாலாவே புகுந்து வந்தால் ஒழிய இவ்வளவு சாத்தியம் இல்லை .யாரை குறித்து எழுதினாலும் பாலா பாலா என மட்டுமே எழுத முடியும் .


விடுதலைக்கு உழைத்த பெரியவர்களை மட்டுமே பேசியே காலம் கடந்து வந்து இருக்கின்றோம் .பஞ்சத்தையும் ,உழைத்த உழைப்பிற்கான ஊதியம் பெறாமல் சுரண்டலை சந்தித்து வந்த மனிதர்களையும் மறந்துவிட்டோம் .அவர்களின் ரத்தத்தில் எழுதபட்ட வாழ்க்கையை இன்று நாம் சொகுசாக வாழ்ந்து வருகின்றோம் .

இந்த படம் பார்க்கும்போது உங்கள் மனதில் ரெத்தம் வடியவில்லை எனில் ,உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆட்ப்படவில்லை எனில் உங்கள் மனங்களில் கோளாறு .

படம் ஹீரோயிசம் பற்றிய படம் அல்ல .குத்து பாட்டுக்கான படம் இல்லை .இது சண்டைகளுக்கான படம் இல்லை .

உண்மைகளுக்கான படம் இது .உண்மையை பேசத்துடிக்கும் படம் .
உலகப்படம் என எண்ணி நீங்க போக வேணாம் .உள்ளூர் படம் உலகத்துக்கான படம் என எண்ணி பார்க்கவேண்டிய படம் .

நான் கடைசிவரை இங்கே கதையை எழுதவில்லை .பாலா எனும் கலைஞனுக்கு நான் செய்யும் மரியாதை அது மட்டுமே .திரை அரங்கில் பாருங்கள் .